கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜி.ஆர். வசந்தவேல் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில் குமாரிடம் ஜி.ஆர். வசந்தவேல் அவர்கள் தனது வேட்பு மனுவை முறையாக சமர்ப்பித்தார். இந்த நிகழ்வில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஒன்றிய மற்றும் நகர செயலாளர்கள், பல்வேறு நிலை பொறுப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு ஆதரவை வெளிப்படுத்தினர்.
வேட்பு மனு தாக்கலுக்கு முன்னர், ஜி.ஆர். வசந்தவேல் ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து தனது மனுவை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், தொகுதி மக்களின் நலன், அடிப்படை வசதிகள் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி செயல்படுவேன் என்று உறுதியளித்தார்.
இதன் மூலம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேர்தல் பரப்புரை மேலும் தீவிரமடைந்து, அரசியல் கட்சிகள் மத்தியில் போட்டி அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment